'இன்னும் சிறப்பா யோசியுங்களேன்!'
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டட திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது.
அதன் பின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், நிருபர்களிடம் கூறுகையில், 'பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், 'கல்வி டிவி, தமிழக அரசு யு டியூப்' ஆகியவற்றின் வாயிலாக படிக்க வேண்டும். கல்வி 'டிவி' கடந்த ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது என்றாலும், இந்த அரசு அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'வீட்டுல, 'டிவி, மொபைல் போன்' என இரண்டுமே, பிள்ளைகள் கையில் தான் இருக்கு... ஆனால் அதுல அவங்க படிக்க மாட்டேன் என்கின்றனர்... 'ஆன்லைன்' வகுப்பு முறையை, இன்னும் எப்படி திறம்படச் செயல்படுத்துறதுன்னு யோசிச்சா நல்லது' என்றார். சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE