வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐ.டி., அணிக்கு ஆலோசகராக, கவிஞர் மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டார். இதனால், தியாகராஜன் அதிருப்தி அடைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த மகேந்திரனுக்கு, ஐ.டி., அணி இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டதும் தியாகராஜனுக்கு, 'செக்' வைப்பதாக கருதப்பட்டது.
இதையடுத்து, ஐ.டி., அணி செயலர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை, பொங்கலுக்கு முன் கட்சி தலைமையிடம், தியாகராஜன் வழங்கி உள்ளார். அவரது ராஜினமா ஏற்கப்பட்டு, அப்பதவியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். தியாகராஜன் வகித்த ஐ.டி., அணி மாநில செயலர் பதவி, மன்னார்குடி எம்.எல்.ஏ.,வும், அயலக அணிச் செயலருமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, டி.ஆர்.பி.ராஜா வகித்த அயலக அணிச் செயலர் பதவி, ராஜ்யசபா எம்.பி., அப்துல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE