சென்னை : பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான இரண்டு நாள் தேர்விலும், ஒரே விதமான 10 வினாக்கள் இடம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர் பணியில், 1,060 காலியிடங்களை நிரப்ப, டிச.,8 முதல், 12 வரை கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., இந்த தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கான விடைக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இரண்டு நாட்கள் தேர்விலும், ஒரே விதமான 10 வினாக்கள் இடம் பெற்றதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தனியார் கல்லுாரி பணியாளர் சங்க நிறுவனர் பேராசிரியர் கார்த்திக், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள புகார்: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வில், 10ம் தேதி நடந்த வேதியியல் தேர்வில் இடம் பெற்ற, 10 வினாக்கள், 12ம் தேதி நடந்த இ.சி.இ., பிரிவு தேர்விலும் மீண்டும் இடம் பெற்றுள்ளன.எனவே, வேதியியல் தேர்வின் வினாக்களை தெரிந்த மாணவர்கள் இ.சி.இ., தேர்வில் எளிதாக பதில் எழுதி, அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement