வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கோவிட் காரணமாக உயிரிழந்தவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வில்வமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜப்பா(72). கடந்த ஏப்ரல் 13ல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், கடந்த ஆண்டு மே 20ம் தேதி கோவிட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று(ஜன.,18) ராஜப்பா பயன்படுத்திய மொபைல்போனுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கோவிட்டால் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த குறுஞ்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE