வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,981 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். 17,456 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 23,865 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 26,981 ஆக சற்று அதிகரித்துள்ளது.
![]()
|
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,50,635 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 26,949 பேர், மற்றும் வங்கதேசம் -7, குவைத்-3 பேர், ஐக்கிய அரபு எமிரேட், சென்று திரும்பியவர் ஒருவர் ,மேற்குவங்கம் 5, கேரளா 4கர்நாடகா 3, மணிப்பூர் 2 ஜார்கண்ட் 2, ஆந்திர மாநிலம் 2 , மிசோராம் 2, அசாம் , சண்டிகர் மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 26,981பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,14,235 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,99,80,920 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 15,477 பேர் ஆண்கள், 11,504 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 17,60,772 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 12,53,425 ஆகவும் அதிகரித்து உள்ளது. 17,456 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,06,501 ஆக உயர்ந்துள்ளது.
35 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 23 பேரும் , அரசு மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,073 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை8,305 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.19 ம் தேதி) 8,007ஆக சற்று குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்
![]() ![]()
|
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE