புதுடில்லி :பார்லிமென்ட் வளாகத்தில் காகிதத்தின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அனைத்து கிளைகள், பிரிவுகளுக்கும் லோக்சபா அறிவுறுத்தியுள்ளது
பார்லிமென்ட் வளாகத்தை பசுமை வளாகமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு மின்சார கார்கள், எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. காகிதத்தின் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.,க்களுக்கென தனியாக, மொபைல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களும் அதன் வாயிலாக அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், கேள்வி நேரத்துக்கான கேள்விகளையும் அதன் வாயிலாக, எம்.பி.,க்கள் பதிவிடலாம்.பார்லிமென்ட் வளாகத்திலும் மாசு ஏற்படுத்தாமல் இருக்க, காகிதத்தின் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, தங்களுடைய காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யும்படி, கிளைகள், பிரிவுகளுக்கு, லோக்சபா அறிவுறுத்தியுள்ளது. வரும், 21ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE