புதுடில்லி :லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் நம் ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவானே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கைது செய்யக் கோரி, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பாக்., ஆதரவுடன் புகார் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான ஜியா முஸ்தபா, 2003ல் 24 காஷ்மீரி பண்டிட்கள் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்தாண்டு அக்டோ பரில் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


அவருடைய மரணத்தால் இந்தியா போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக சொல்லி, ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரிட்டனில் உள்ள போர்க் குற்றப் பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த 'ஸ்டோக் ஒயிட்' என்ற சட்ட அமைப்பு, இந்த புகாரை அளித்துள்ளது. அதில், நரவானே, அமித் ஷா மற்றும் சில பெயர் தெரியாத ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE