மறைமலை நகர்-மறைமலை நகர் அருகே, இரு பெண் குழந்தைகளுடன், கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஞானவேல், 44. ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். அதன் பின், இவர், ஜெயந்தி, 38, என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா 5, பூஜா 3, என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததுள்ளது. சில தினங்களுக்கு முன்னரும் சண்டை ஏற்படவே தன் இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற ஞானவேல் பின் வீடு திரும்பவில்லை. இதனால் கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளை காணவில்லை என்று ஜெயந்தி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதற்கிடையே, மறைமலை நகர் அடுத்த, கடம்பூர் பாழடைந்த விவசாய கிணற்றில் ஒரு ஆண் சடலம் மற்றும் இரு பெண் குழந்தைகள் சடலம் மிதப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.மறைமலை நகர் போலீசார் கிராம மக்களின் உதவியுடன், சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். பின், உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வந்த ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். தற்கொலைக்கு குடும்ப தகராறு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணங்களாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE