காஞ்சிபுரம்-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்விற்கு, ஜனவரி, 27 வரை விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறை அறிவித்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு மார்ச் 5ல் நடைபெற உள்ளது.இந்த தேர்வு எழுத விரும்பும் 8ம் வகுப்பு மாணவ - மாணவியர் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, 50 ரூபாய் தேர்வுக்கட்டணத்துடன், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வரும் ஜன., -27ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதாமாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். இது, 10ம் வகுப்பு வரை அம்மாணவர்களுக்கு வழங்கப்படும்.இத்தகவலை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE