காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில், கோவில் திருவிழா நடத்த ஊர்மக்கள் விடுத்த தொடர் கோரிக்கையால், 50 பேருடன் மட்டும் விழா நடத்த, அதிகாரிகள் அனுமதி அளித்ததால், இன்று விழா நடைபெறுகிறது.காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில், ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று, அம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருவிழாக்கள் நடத்த, அரசு தடை வித்துள்ளது. இருந்தாலும் சில பகுதிகளில் திருவிழா நடந்ததை அறிந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்திலும் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என, காவல் துறைக்கு கோரிக்கை வைத்தனர்.காணும் பொங்கல் அன்று, முழு ஊரடங்கு திருவிழா நடக்கவில்லை. எப்படியும் இந்த ஆண்டு திருவிழா நடத்தியே ஆக வேண்டும் என, அந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு, கிராமத்தில் ஒன்று கூடினர்.தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ்சீசர் மற்றும் தாசில்தார் வரதராஜன் ஆகியோர் அங்கு சென்றனர்.பொது மக்களிடம் பேச்சு நடத்தி, விழா நடத்தினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறியும், அவர்கள் ஏற்கவில்லை.நேற்று காலை, கோட்டாட்சியர் ராஜலட்சுமியை சந்தித்து, திருவிழாவிற்கு அனுமதி கேட்டு, கிராமத்தினர் மனு கொடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, 50 பேர் மட்டும் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என, கறாராக கூறி அனுமதி அளித்தார்.இதனால், இன்று மாலை, தாமல் கிராமத்தில் திருவிழா நடக்க இருப்பதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE