காஞ்சிபுரம்-கூரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு வேலை வழங்கவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டனர்.காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல முறைகேடு நடப்பதாக, புகார் எழுந்துள்ளது.இத்திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கிராமத்தில் ஒரு பகுதி மக்களுக்கு இதுவரை, 25 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.எங்களுக்கும் முறையாக வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, நேற்று முறையிட்டனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் ஊரில் ஒரு பகுதி மக்களுக்குத்தான் தொடர்ந்து வேலை தருகின்றனர். கேட்டால், 'எங்களுக்கா நீங்கள் ஓட்டு போட்டீர்கள். எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லுங்க' என கூறுகின்றனர். வேலைக்கு வராதோரின் பெயரில் அட்டை எடுத்து, பணம் கொள்ளையடிக்கின்றனர். அதனால் அதிகாரிகளிடம் முறையிட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE