பிரதமரின் தேசிய கல்விக் கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: கவர்னர் தமிழிசை

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 20, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுச்சேரி: 'பிரதமரின் தேசிய கல்விக் கொள்கை, கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்' என கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழக கல்வியியல் புலம் மற்றும் தேசிய கல்வியியல் கழகம் இணைந்து, 'ஆசிரியர்களுக்கான தொழில்முறை தரநிலை' குறித்த பொது கருத்தரங்கம் நேற்று நடந்தது.இணைய வழியில் நடந்த கருத்தரங்கில், தேசிய கல்வியியல் கழகத் தலைவர் சந்தோஷ்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி: 'பிரதமரின் தேசிய கல்விக் கொள்கை, கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்' என கவர்னர் தமிழிசை பேசினார்.



புதுச்சேரி பல்கலைக்கழக கல்வியியல் புலம் மற்றும் தேசிய கல்வியியல் கழகம் இணைந்து, 'ஆசிரியர்களுக்கான தொழில்முறை தரநிலை' குறித்த பொது கருத்தரங்கம் நேற்று நடந்தது.

இணைய வழியில் நடந்த கருத்தரங்கில், தேசிய கல்வியியல் கழகத் தலைவர் சந்தோஷ்குமார் சாரங்கி, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், தேசிய கல்விக் கழகத்தின் உறுப்பினர் செயலர் கேசங் யாங்சோம் ஷர்பா, கல்வியியல் புல முதல்வர் செல்லமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




latest tamil news


கருத்தரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: மனிதனின் உடல், மனம், ஆன்மா அனைத்திலும் சிறந்ததை வெளிக்கொண்டு வருவதே கல்வி. காந்தியின் இக்கருத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கையை நமக்கு அளித்துள்ளார்.

அது, கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது, உலகத் தரத்திலான பல்நோக்கு கல்வி நிறுவனங்களை உருவாக்க முக்கியத்துவம் தருகிறது. மாணவ விருப்பத்திற்கு ஏற்ற தொழிற் கல்வியை பள்ளி அளவிலேயே கற்றுத்தரப்படும். கலை, அறிவியல் என்ற பாகுபாடு இருக்காது.கொரோனா தொற்று, கல்வித் துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கல்வித் துறையை நவீனமயமாக்குவதற்கான வாய்ப்பாக அது அமைந்தது.


latest tamil news


இன்று வகுப்பறை கல்வி முறையிலிருந்து இணையவழிக் கல்வி முறைக்கு நாம் மாறி உள்ளோம். அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் பன்முகத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.



ஆசிரியர் பணி என்பது, எதிர்கால பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் அடுத்த தலைமுறையை உருவாக்குவது. மற்ற எல்லா பணிகளுக்கும் ஆசிரியர் பணியே அடிப்படை.கல்வி கற்பிக்கும் போது, அரசியல் சாசனம் முன்வைக்கும் அடிப்படை கடமைகளை போதிப்பது, நல்ல குடிமக்களை உருவாக்க வழிவகுக்கும். இவ்வாறு கவர்னர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

RandharGuy - Kolkatta,இந்தியா
21-ஜன-202204:57:46 IST Report Abuse
RandharGuy ஐஐடி கான்பூர் பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா, சில நாட்களுக்கு முன்பு ஐஐடி மண்டியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். புனித மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் 'தீய ஆவிகளை' விரட்டுவதாக அவர் வெளியிட்ட காணொளி மிகுந்த சர்ச்சையாகியுள்ளது. பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராக பணிபுரிவதாக கான்பூர் ஐஐடியின் இணையதள தரவுகள் கூறுகின்றன. மேலும், டெல்லி ஐஐடியில் பி.எச்.டி பட்டமும் ஜெர்மன் தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் மற்றொரு பிஎச்டி பட்டமும் பெற்றுள்ளார்.
Rate this:
21-ஜன-202212:24:05 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்தீய ஆவிகளை விரட்ட உங்கள் மதமும் முயல்கிறதே ?...
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
20-ஜன-202218:11:25 IST Report Abuse
J. G. Muthuraj ஐயையோ, இந்த அம்மா 66 - பக்கங்கள் கொண்ட புதிய கல்விக்கொள்கையை முழுவதும் படிக்காமலேயே அரசியல் கண்ணோட்டத்தில் பேசுகிறார்களே.....
Rate this:
Cancel
20-ஜன-202217:40:02 IST Report Abuse
அப்புசாமி குடுக்குற காசுக்கு கூவணும். இவரெல்லாம் யாருடைய கல்விக் கொள்கையில் படிச்சி டாக்டரானாரு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X