லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் அகிலேஷூக்கு ஆதரவாக மம்தாவை தொடர்ந்து, தெலுங்கானா முதல்வரும் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி., மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை.அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]()
|
முன்னதாக நடந்த முடிந்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் நேரில் பிரசாரம் செய்தார். இதற்கு கைமாறாக அகிலேஷ் யாதவ்க்கு ஆதரவாக மம்தா பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், அகிலேஷூக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement