சென்னை : மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தமிழக பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கை: கொரோனா பெருந்தொற்று காரணமாக, மாணவர்களின் நலன் கருதி, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வரும் 31ம் தேதி வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால், நாளை (ஜன.,22) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் நாளை விடுமுறை நாள்; அவர்கள் பள்ளிக்கு பணிக்கு வர வேண்டியதில்லை என பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement