புதுடில்லி: டில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய பார்லி கட்டடத்தின் கட்டுமான பணிகளின் செலவுகள் 30 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மொத்த பட்ஜெட் ரூ.1,250 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை மத்திய அரசு கட்டி வருகிறது. சென்ட்ரல் விஸ்டா எனப்படும் இந்த திட்டத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகளை 2024ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோவிட் பொது முடக்கத்திலும் கட்டுமான பணிகள் தடையில்லாமல் நடைபெற்ற வந்தது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு ரூ.977 கோடி செலவில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டை விட தற்போது 30 சதவீதம் (ரூ.282 கோடி) கூடுதலாக செலவாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் சென்ட்ரல் விஸ்டாவின் ஒட்டுமொத்த பட்ஜெட் கட்டி முடிக்கும்போது ரூ.1,250 கோடிக்கு மேல் செலவினம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், சிமென்ட் பொருட்களின் விலை உயர்வே இந்த செலவினங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE