வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள்(ஜன.,23-ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த கடந்த 16ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கோவிட் - ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் நலன் கருதி வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இந்த முழு ஊரடங்கு நாளில், கடந்த 16ம் தேதி முழு ஊரடங்கின் போது நடைமுறைபடுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும்.

வெளியூரில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ்நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும். வாடகை கார்கள் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE