போச்சம்பள்ளி: மத்தூர் அடுத்த, பெருகோபனபள்ளி, குருகப்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்தர், 30. இவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திருப்பூரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், பிரியங்கா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தினார். பிரியங்காவின் முதல் கணவரின் ஆண் குழந்தை தர்ஷன், 2. இந்த குழந்தையை பாலச்சந்தர் குருகப்பட்டியிலுள்ள, தன் தந்தை முனுசாமி, 53, என்பவரிடம் விட்டு விட்டு, திருப்பூர் வேலைக்கு சென்று விட்டார். குழந்தையை முனுசாமி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மத்தூர் போலீசில் தகவல் அளித்தனர். அதன்படி, வழக்குப்பதிந்த போலீசார் முனுசாமியை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement