சென்னை: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிரவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![]()
|
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: இலங்கையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 125 படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அதன்படி தமிழகத்தை சேர்ந்த 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும் 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
![]()
|
தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த மீன்பிடி படகு மற்றும் உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement