கராச்சி:பாகிஸ்தானில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் அடிப்படை புரிதல் இல்லாமல் இருப்பது சமீபத்திய ஆய்வில் உறுதியாகி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆகா கான் பல்கலையின் கல்வி வளர்ச்சி மையம் இடைநிலை கல்வி வரையிலான மாணவர்களுக்கு பாடங்களில் அடிப்படை புரிதல் தொடர்பான ஆய்வை சமீபத்தில் நடத்தியது.இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5, 6 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆய்வு அறிக்கை விபரம் வருமாறு:
இடைநிலைக்கல்வி வரையிலான மாணவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடிப்படை புரிதல் இல்லாமல் உள்ளனர். இவர்களில் 50ல் ஒருவர் மட்டுமே எழுத்தை எண் வடிவில் மாற்றும் திறன் உடையவர்.மதிப்பீட்டில் 100க்கு சராசரியாக கணிதத்தில் 27 மற்றும் அறிவியலில் 34 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளனர். 1 சதவீத மாணவர் மட்டுமே இரு பாடங்களிலும் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement