வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பொது இடத்தில் சிலை வைப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக அனுமதி வழங்கப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தலைமை செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில் இறையன்பு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு முரணாக பொது இடத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. உள்ளாட்சி அமைப்பின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

அரசு நிலம், நீர்நிலை, சாலையை ஆக்கிரமிக்காமல் வைக்கப்படுகிறதா என ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதில் மனுவில் இறையன்பு தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE