வேலுார்:வேலுார் மாவட்டத்தில், எருது விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: எருது விடும் விழாக்கள் நடத்துவது குறித்து அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளை வேலுார் மாவட்டத்தில் விழா நடத்துபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அளவுக்கதிமான கூட்டம், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விழா நடந்து வருவதால் கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதாக புகார்கள் வந்தன. கடந்த 15 ம் தேதி முதல் 22 ல் வரை நடந்த எழுது விடும் விழாக்களை ஆய்வு செய்ததில், அரசு தெரிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள், கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.எனவே வேலுார் மாவட்டத்தில், எருது விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் எருது விடும் விழாக்கள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE