திருப்பத்துார்:ஜோலார்பேட்டை அருகே, கல்லுாரி மாணவர் மூக்கை அறுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மூக்குத்தி வட்டம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு, 19. இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்தார்.
கடந்த 20 ம் தேதி மாலை 5:00 மணிக்கு மூக்குத்தி வட்டத்தில் உள்ள மெக்கானிக் கடையில் தனது பைக்கிற்கு பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முனிக்கண்ணு, 63, என்ற விவசாயி பைக்கில் வந்து விஷ்ணு வின் மீது மோதினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த முனிக்கண்ணு, கத்தியால் விஷ்ணுவின் இடதுபுற காது, தாடை, மூக்கில் கத்தியால் அறுத்தார். இதில் படுகாயமடைந்த விஷ்ணு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜோலார்பேட்டை போலீசார் தலைமறைவான முனிக்கண்ணுவை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement