திருப்பூர்: திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி சேடர்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. அதே பகுதியில் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார்.
இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தொழிலாளர்கள் குடோனை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இச்சூழலில், நள்ளிரவு 1:00 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவி எரிய ஆரம்பித்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குடோன் முழுவதும் வேஸ்ட் துணிகள் அதிகம் இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருந்தது. குடோன் முழுவதும் தீ பரவிய காரணத்தால், தற்போது வரை தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE