புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதாகவும், மெட்ரோ நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் பயோடெக்னாலஜி துறைகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் இன்சாகாக்(INSACOG) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூகப்பரவலாக மாறியுள்ளது. பல்வேறு மெட்ரோ நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரசின் புதிய துணை மாறுபாடான பி.1.640.2 குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது வேகமாக பரவும், நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலில் இருந்து தப்பிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்போது இது கவலைக்குரிய பட்டியலிலும் கிடையாது. இந்தியாவில் பரவவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE