குமாரபாளையம்: குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில், ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. ஆய்வு செய்தனர். குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று ஆர்.டி.ஒ. இளவரசி, டி.எஸ்.பி. சீனிவாசன், நில அளவை தாசில்தார் ஜானகி, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, கால்நடை மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனர்.
இது பற்றி குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலை வினோத்குமார் கூறியதாவது: குமாரபாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி திருச்செங்கோடு ஆர்.டி.ஒ.,- டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், கால்நடைத்துறையினர் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE