குமாரபாளையம்: குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் ஊரடங்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கொரோனா ஊரடங்கு மாநிலம் முழுதும் ஞாயிறு அமல்படுத்தப்படவுள்ளது. குமாரபாளையத்தில், சேலம்- கோவை புறவழிச்சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அதில் முக கவசம் அணியாமல் வந்த ஓட்டுனர்களிடம் முக கவசம் அணிந்து வாகனம் ஓட்ட அறிவுறுத்தினர். மேலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஆட்கள் வந்தால் சமூக இடைவெளி பின்பற்றுங்கள் என அறிவுறுத்தினர். கிருமிநாசினி அடிக்கடி பயன்படுத்த கேட்டுக்கொண்டனர். கண்ணாடி தூக்கி விடப்பட்டு இருக்கும்போது எதுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்ட நபர்களுக்கு அறிவுரை கூறி அபராதம் விதித்தனர். ஊரடங்கு நாளில் வாகனங்களை அவசியம் இல்லாமல் எடுத்துக்கொண்டு வெளியில் வராதீர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து எஸ்.ஐ. வெங்கடேசன், ஏட்டுக்கள் சுகுமார், ராதாகிருஷ்ணன் வாகன சோதனை பணி மேற்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE