தஞ்சாவூர்-தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம்; கோட்டுச்சேரி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவரது மகன் வெற்றிச்செல்வன், 42, காரைக்காலில் மதுபானக் கடைகள் நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 6 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 21ம் தேதி மாலை வீட்டில் இருந்து, காரில் வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங் பகுதியில் நின்ற காரின் அருகே ஒருவர் மயங்கி கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.விசாரணையில், கோட்டுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., பஞ்சவர்ணத்தின் மகன் வெற்றிச்செல்வன் என்பது தெரிந்தது. கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE