புதுச்சேரி-சமூக வலைதளங்களில் புதுச்சேரி கவர்னர் அறிவிப்பு போன்று, போலியாக ஊரடங்கு செய்தியை பரப்பிய வாலிபர், சைபர் கிரைம் போலீசில் சிக்கினார்.'
புதுச்சேரி முழுதும், வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; மற்ற நாட்களில், கடைகள் மதியம் 2:00 மணி வரை செயல்படும்' என கவர்னர் தமிழிசை கூறியது போல, சமூக வலைதளங்களில் பதிவுகள் உலா வந்தன. கலெக்டர் வல்லவன் புகாரின்படி, கடந்த 18ம் தேதி வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், பொய்யான தகவலை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர், புதுச்சேரி, உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் பிரவீன் குமார், 31 என்பது தெரிந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, பிரவீன்குமாரின் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவருக்கு, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 41ன் கீழ் நோட்டீஸ் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE