மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., சார்பில், மதுரையில் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜுவிடம், 'முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளாரே...' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் உஷ்ணமான ராஜு, 'முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் எல்லாம், எங்கள் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்தவை... 'ரிங் ரோடு' உயர்மட்ட பாலமாகட்டும், வைகை தரைப் பாலங்கள் ஆகட்டும், எல்லாம் எங்கள் ஆட்சியிலேயே நிதி ஒதுக்கப்பட்டது...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'திட்டம் அறிவிச்சு நிதி ஒதுக்குனா போதுமா... அதை நிறைவேற்ற வேண்டாமா?' என்றார்.
அருகிலிருந்த இளம் நிருபர், 'நிதி ஒதுக்குனா மட்டும் போதுமே, 'கமிஷன்' வந்துடுமே... அப்புறம்திட்டம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
இதனால் உஷ்ணமான ராஜு, 'முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் எல்லாம், எங்கள் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்தவை... 'ரிங் ரோடு' உயர்மட்ட பாலமாகட்டும், வைகை தரைப் பாலங்கள் ஆகட்டும், எல்லாம் எங்கள் ஆட்சியிலேயே நிதி ஒதுக்கப்பட்டது...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'திட்டம் அறிவிச்சு நிதி ஒதுக்குனா போதுமா... அதை நிறைவேற்ற வேண்டாமா?' என்றார்.
அருகிலிருந்த இளம் நிருபர், 'நிதி ஒதுக்குனா மட்டும் போதுமே, 'கமிஷன்' வந்துடுமே... அப்புறம்திட்டம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement