சென்னை--தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 30 ஆயிரத்து 580 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள 330 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும் 1.57 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில் 6,383; கோவையில் 3,912; செங்கல்பட்டில் 1,841; கன்னியாகுமரியில் 1,248; சேலத்தில் 1,080; திருவள்ளூரில் 1,014; காஞ்சிபுரத்தில் 700 பேர் உட்பட மாநிலம் முழுதும், 30 ஆயிரத்து 580 பேருக்கு பாதிப்பு உறுதியானது
.சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உள் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, 24 ஆயிரத்து 283 பேர் குணமடைந்தனர். 'தற்போது, சென்னையில் 54 ஆயிரத்து 572; செங்கல்பட்டில் 17 ஆயிரத்து 856; கோவையில் 22 ஆயிரத்து 921; திருவள்ளூரில் 7,950 பேர் உட்பட, இரண்டு லட்சத்து 954 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.இதில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 4,709; சாதாரண படுக்கையில் 4,219; தீவிர சிகிச்சையில் 1,163 என, 10 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் வீட்டு தனிமை மற்றும் கொரோனா கவனிப்பு மையத்தில் உள்ளனர். தொற்றால் நேற்று 40 பேர் உட்பட இதுவரை 37 ஆயிரத்து 218 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள 330 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும் 1.57 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில் 6,383; கோவையில் 3,912; செங்கல்பட்டில் 1,841; கன்னியாகுமரியில் 1,248; சேலத்தில் 1,080; திருவள்ளூரில் 1,014; காஞ்சிபுரத்தில் 700 பேர் உட்பட மாநிலம் முழுதும், 30 ஆயிரத்து 580 பேருக்கு பாதிப்பு உறுதியானது
.சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உள் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, 24 ஆயிரத்து 283 பேர் குணமடைந்தனர். 'தற்போது, சென்னையில் 54 ஆயிரத்து 572; செங்கல்பட்டில் 17 ஆயிரத்து 856; கோவையில் 22 ஆயிரத்து 921; திருவள்ளூரில் 7,950 பேர் உட்பட, இரண்டு லட்சத்து 954 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.இதில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 4,709; சாதாரண படுக்கையில் 4,219; தீவிர சிகிச்சையில் 1,163 என, 10 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் வீட்டு தனிமை மற்றும் கொரோனா கவனிப்பு மையத்தில் உள்ளனர். தொற்றால் நேற்று 40 பேர் உட்பட இதுவரை 37 ஆயிரத்து 218 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement