வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-'ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசும் தலைவர்களை கைது செய்ய வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஹிந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்துள்ளன.
வெறுப்பு பேச்சு
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கோரி, இரண்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
ஹிந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:ஹரித்வார் மாநாட்டில் ஹிந்து தலைவர்களின் பேச்சுகள் ஹிந்து மதத்துக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கான பதில்கள் தான்; வெறுப்பு பேச்சுகள் இல்லை. ஹிந்து ஆன்மிக தலைவர்கள் மீது அவதுாறு ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர்களது பேச்சுகள் வெறுப்பு பேச்சுகளாக சித்தரிக்கப்படுகிறது. அசாதுதீன் ஓவைசி, வாரீஸ் பதான் உள்ளிட்ட தலைவர்கள் பலர் ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பை துாண்டும் வகையில் எப்போதும் பேசி வருகின்றனர். அவர்களை முதலில் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்
நடவடிக்கை
நீதிக்கான ஹிந்து முன்னணி அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அதேபோல் ஹிந்துகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE