திருச்சி: திருச்சியில் பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் குழந்தையை வைத்து சூதாடிய குழந்தையின் தந்தை, அக்குழந்தையை ரூ.80 ஆயிரத்திற்கு விற்றவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி உறையூர் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலாம், 37, இவரது மனைவி கைருன்னிசா. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அப்துல் சலாம் - கைருன்னிகா தம்பதிக்கு 5வதாக ஆண் குழந்தை பிறந்தது. சூதாட்ட பிரியரான அப்துல் சலாம், பிறந்து 2 மாதமான ஆண் குழந்தையை ஈடாக வைத்து, சூதாடி உள்ளார்.

அதில், ஆரோக்கியராஜ் என்பவரிடம் தோற்ற குழந்தையை தொட்டியம் அருகே உள்ள கீழடி நிவாச நல்லூரை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் 80 ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வைத்து சூதாடிய அப்துல் சலாம், அதை விற்ற ஆரோக்கியராஜ், வாங்கிய சந்தன குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE