மும்பை : தேசியவாத காங்., தலைவர் சரத்பவாருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு இன்று ( ஜன. 24) உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே உடல் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE