பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பரமக்குடி குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சவுக்கத் அலி தெருவில் கர்நாடகாவில் இருந்து வந்த தமிழக லாரியில் இருந்து பொருட்கள் இறக்கப்பட்டன. அவற்றை சோதனையிட்டபோது 54 மூடைகளில் 1272 கிலோ புகையிலை பொருள் இருந்தது தெரிந்தது.
டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே இரண்டம் பள்ளியைச் சேர்ந்த மகேஷ் குமார், 22, பரமக்குடி வடிவேல் ஸ்டோர் உரிமையாளர் ராமானுஜம், 59, கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட மூடைகளை பரமக்குடி ஸ்டேஷன் கொண்டு வந்தனர்.
பரமக்குடி டி.எஸ்.பி., திருமலை கூறியதாவது: பரமக்குடியில் ராமானுஜம் என்பவர் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யும் வியாபாரிகள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவர், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE