வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு, மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது எனவும், கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றுவதால், கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இரு மொழி கொள்கையை பின்பற்றுவது என்பதே கொள்கை முடிவு. ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE