தண்டையார்பேட்டை, : ஆர்.கே.நகரில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தி, ராட்சத தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடந்தது.சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், தடுப்பூசி போட வலியுறுத்தி நேற்று பேரணி நடத்தினர்.அப்போது, பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலில், 15 அடியில் செய்யப்பட்ட ராட்சத தடுப்பூசியை வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆர்.கே.நகரில் துவங்கிய பேரணி, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே முடிந்தது.அப்போது மூலிகை கஷாயம், முக கவசம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இது குறித்து, தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொது செயலர் இட்லி இனியவன் கூறுகையில், ''கொரோனா நோய் தொற்றால் சமையல் கலை தொழிலாளர்கள் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.''இவற்றை எல்லாம் கடந்து மீண்டு வர, அரசு காட்டிய வழிமுறையின்படி தடுப்பூசி செலுத்தி, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE