மதுரை:நார்த்தாமலை துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து, தோட்டா பாய்ந்து சிறுவன் பலியானதைத் தொடர்ந்து, அத்தளத்தை மூடி விட்டதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கவிவர்மன் தாக்கல் செய்த பொதுநல மனு: நார்த்தாமலை அருகே போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் டிச., 30ல் பயிற்சியில் ஈடுபட்டனர். தோட்டா வெளியேறி, வீட்டிலிருந்த ஒரு சிறுவனின் தலையில் பாய்ந்து, அவர் உயிரிழந்தார்.சிறுவன் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
கீரனுார் போலீசில் நிலுவையில் உள்ள வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். நார்த்தாமலை துப்பாக்கி சுடும் தளத்தை மூட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, 'நார்த்தாமலை துப்பாக்கி சுடும் தளம் டிச., 31ல் மூடப்பட்டது. வரும் காலங்களில் துப்பாக்கி சுடும் தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE