ஈரோடு: தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் அஸ்வத் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோட்ட தலைவர் ஆடிட்டர் கஸ்தூரி ரங்கன், கோட்ட செயலாளர் சபரிநாதன் பங்கேற்றனர். தஞ்சையில் பிளஸ் ? மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். மாற்று மத பள்ளிகளில் கட்டாய மத மாற்றம் நடக்கிறதா? என கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும். கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டது உறுதியானால், கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கோவில் சொத்துகளில் ஆக்ரமிப்பு இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement