ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 95 போலீசாருக்கு குடியரசு தின பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. போலீஸ் துறையில் தொடர்ந்து, 20 ஆண்டுகள் எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் பணியாற்றும், ஈரோடு மாவட்ட போலீசார், 55 பேருக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு, முதல்வர் விருது வழங்கப்படுகிறது. விருதுடன் பதக்கம், சான்றிதழ், சம்பள உயர்வு கிடைக்கும். இதேபோல் சிறப்பாக பணியாற்றிய, 40 போலீசாருக்கு குடியரசு தின பதக்கம் வழங்கப்படுகிறது. விருதுடன் சான்றிதழ், பதக்கம் கிடைக்கும். விருது அறிவிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பதக்கம், சான்றிதழ் பெற்றுக் கொள்வர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement