மேட்டூர்: மேட்டூர் அடுத்த கோட்டையூரில் இருந்து, காவிரி மறுகரையிலுள்ள தர்மபுரி மாவட்டம் ஒட்டனூருக்கு, காவிரி குறுக்கே, 250 கோடி ரூபாய் செலவில் இணைப்பு பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, தி.மு.க.,வை சேர்ந்த, தர்மபுரி எம்.பி., செந்தில்குமார், ஒட்டனூரில் இருந்து விசைப்படகில் நேற்று கோட்டையூர் வந்தார். அங்கு பாலம் கட்ட திட்டமிட்டுள்ள பகுதியை பார்வையிட்டார். அப்போது, அவர் கூறியதாவது: இரு இடங்களில் பாலம் கட்ட கோரிக்கை வைத்தேன். அதில், பண்ணவாடியில் இருந்து, மறுகரையிலுள்ள நாகமறைக்கு, காவிரி குறுக்கே, 3.5 கி.மீ., பாலம் அமைக்க வேண்டும். ஆனால், கோட்டையூரில் இருந்து ஒட்டனூருக்கு காவிரி குறுக்கே, 800 மீட்டர் நீளம் பாலம் கட்டினால் போதும். இதனால், இந்த பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணி விரைவில் தொடங்கும். இதன்மூலம் விசைப்படகில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE