தஞ்சாவூர்: தஞ்சாவூரில், எம்.ஜி.ஆர்., சிலையை பெயர்த்து, கீழே தள்ளிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர், வடக்கு வீதியில், ?.? அடி உயரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிமென்ட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, நேற்று காலை காணாமல் போய் இருந்தது. தகவல் அறிந்த அ.தி.மு.க.,வினர் திரண்டனர். சிலையை தேடிய போது, அருகில் உள்ள டீக்கடை பகுதியில் கிடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைத்தனர். அ.தி.மு.க.,வினர் புகார்படி, மேற்கு போலீசார், எம்.ஜி.ஆர்., சிலை அருகே கடை ஒன்றில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். இதில், தஞ்சாவூர், வடக்குவாசல் பகுதியைச் சேர்ந்த சேகர், 40 என்பவர், மது போதையில் எம்.ஜி.ஆர்., சிலையை பெயர்த்து எடுத்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், சிலை உடைப்புக்கு அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE