வேலூர்: செம்மரம் வெட்ட தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் ஏஜென்ட்டுகளை பிடிக்க, ஆந்திரா மாநில தனிப்படையினர் வேலூரில் முகாமிட்டுள்ளனர். ஆந்திரா நெல்லூர் மாவட்டம், சில்லக்கூறு புத்தானம் வனப்பகுதியில், அம்மாநில போலீசார் கடந்த, 23ல் நடத்திய சோதனையில், செம்மரம் வெட்டிய தமிழகத்தை சேர்ந்த, 58 பேரை கைது செய்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 45 செம்மரக்கட்டைகள், 24 கோடாரிகளை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம், அமிர்தி, ஒடுக்கத்தூர், ஊசூர், சந்தமேடு, அல்லேரி மலையை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள், வேலூர், அணைக்கட்டை சேர்ந்த சில செம்மரக்கட்டை ஏஜென்ட்டுக்கள் மூலம் அழைத்து வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, நெல்லூர் ஏ.எஸ்.பி., ரத்தினம் தலைமையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் செம்மரம் ஏஜென்டுகளை பிடிக்க, வேலூர், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதிகளில் நேற்று முகாமிட்டு, தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE