கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகளுக்கு, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார்(கிருஷ்ணகிரி), தமிழ் செல்வம் (ஊத்தங்கரை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில், அ.தி.மு.க.,வினர், மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார், மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் வெற்றிவேல், தர்மபுரி நகர செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE