வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப். 19 தேதி ஒரே கட்டமாக தேர்தல் தேதியை இன்று (ஜன.26) அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார்.
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜன.27ம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைக் காரணம் காட்டி, தாக்கலான பொதுநலமனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் 'நகர்ப்புற தேர்தலை நடத்த தடையில்லை' என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், இன்று (ஜன.26) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
![]()
|
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, பிப். 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தேர்தலையொட்டி தமிழகத்தில் 31,029 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னைக்கு மட்டும் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்புபணியில் 80 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தேர்தல் விவரம்:
வேட்புமனு தாக்கல் -ஜன. 28
மனுதாக்கல் கடைசி நாள் -பிப்.04
வேட்புமனு பரிசீலனை - பிப்.05
வேட்புமனு திரும்ப பெற - பிப். 07
ஓட்டுப்பதிவு - பிப். 19
ஓட்டு எண்ணிக்கை - பிப். 22
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE