கடம்பத்துார்:கடம்பத்துார் ரயில் நிலையம் பகுதியில், தண்டவாளத்தை கடக்க முயன்றவர், ரயில் மோதி இறந்தார்.
கடம்பத்துார் ரயில் நிலையத்தில், நேற்று, மதியம் 12:00 மணியளவில், நான்காவது நடைமேடையில், வாலிபர் ஒருவர் மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நடைமேடையிலிருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது மும்பையிலிருந்து, சென்னை நோக்கி சென்ற தாதர் விரைவு ரயிலில் அடிபட்டார்.
இதில், படுகாயமடைந்த அந்த வாலிபர் இறந்தார்.தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இறந்த வாலிபருக்கு 25 வயதிருக்கும் என்றும், பூப்போட்ட பிங்க் நீல சட்டையும், ஸ்கைபுளூ பேண்டும் அணிந்திருந்தாகவும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருவதாக திருவள்ளூர் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE