சென்னிமலை: அ.தி.மு.க., சார்பில் பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வார்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்பாளராக கலந்து கொண்டார்
* காங்கேயத்தில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் வெங்கு மணிமாறன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலரும் முன்னாள் எம்.எல்.ஏ., வுமான நடராஜ் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காங்கேயம் நகரத்தில் மொத்தமுள்ள, 18 வார்டுகளில் அதிகப்படியான வார்டுகளில் வெற்றி பெறுவதோடு, நகர்மன்றத் தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்தவரே வெற்றி பெறும் வகையில், நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE