வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா' இன்று (ஜன.27) டாடா சன்ஸ் குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

இதையடுத்து ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் நடவடிக்கையை துவங்கியது. எனினும் ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால், 'ஏர் இந்தியா' நிறுவனத்தை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இன்று (ஜன.27) ஏர் இந்தியா நிறுவனம், டாடா சன்ஸ் குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE