ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கலந்தாய்வு முகாமில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் காரணமாக, ஆசிரியர்கள் இரவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் புனித அந்திரேயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் கலந்தாய்வு முகாம் நடக்கிறது. நேற்று கடலாடி, மண்டபம் பகுதி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. இதில் மண்டபம் பகுதிக்கு மட்டும் நடத்திவிட்டு, கடலாடி பகுதிக்கு காலதாமதம் செய்தனர்.
கடலாடியில் 5 காலிப்பணியிடங்களுக்கு 25 ஆசிரியர்கள் வந்தனர். நீதிமன்ற தடை காரணமாக 2 பணியிடங்களுக்கு நடத்தவில்லை, மீதியுள்ள 3 பணியிடத்திற்கும் கலந்தாய்வு நடத்தாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்து நேற்றிரவு ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கல்வி மாவட்ட அலுவலர் ராமநாதபுரம் பாலாஜி, மண்டபம் முருகம்பாள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை எனக்கூறி இரவு 8:30 வரை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ----------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE