சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், இன்று(ஜன.,28) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நியூ இந்தியா இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உள்ள, 16 சங்கங்களை உள்ளடக்கிய கூட்டு போராட்டக்குழு, இன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
'நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில், நாடு முழுதும் அதிகாரிகள், ஊழியர்கள் என, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement