திருப்பூர்: பிறந்து ஒரு நாளான ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அப்பனுாத்தைச் சேர்ந்தவர் சகுந்தலாமணி, 40; கடந்த 24ம் தேதி இரவு, பிரசவ வலியுடன், தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 25ம் தேதி அதிகாலை 1:30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது.அன்று காலை, 8:20 மணியளவில், குழந்தையுடன் தாய் மாயமானார். தாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான குழந்தை மற்றும் தாயை தேடினர். சகுந்தலாமணி போலீசில் சிக்கினார்.
சகுந்தலாமணியின் கணவர், ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ரத்தினசாமி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு சகுந்தலாமணி கர்ப்பமானார். இவ்விஷயம் வெளியில் தெரிந்தால், அவமானம் என நினைத்து, வெளியூரில் இருந்தார்.குழந்தை பிறந்த பின், அதை கொல்ல இருவரும் முடிவு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கீரனுார், காட்டம்பட்டியில், குழந்தையை ஒரு துணியில் சுற்றி, கல்லை கட்டி கிணற்றில் வீசி கொன்றது தெரிந்தது.சகுந்தலாமணியை கைது செய்து, ரத்தினசாமியை தேடி வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement